search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்ட விழிப்புணர்வு முகாம்"

    • கருப்பகவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது
    • மூன்றாம் பாலினத்தவர் குறித்த சட்டம் குறித்து விளக்கி கூறப்பட்டது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் திருப்பூர் கருப்பகவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மூன்றாம் பாலினத்தவர் குறித்த சட்டம் குறித்து விளக்கி கூறப்பட்டது.

    கோர்ட்டு வக்கீல்கள் அருணாசலம், திங்களவள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ரியாஷ்கான் ஆகியோர், பெண் குழந்தைகள் நலனுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் குறித்தும், மூன்றாம் பாலினத்தவரை சமுதாயத்தில் வேறுபாடின்றி நடத்த வேண்டும் என்பது குறித்தும், பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துக்கூறி னார்கள். முடிவில் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் நந்தகோபால் நன்றி கூறினார். இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் பல்லடம் சினேகா சமூகசேவை மைய வளாகத்தில் நடைபெற்றது.
    • வளர் இளம் பருவத்தினர்,சமூகசேவை மைய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் பல்லடம் சினேகா சமூகசேவை மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் ராஜசேகரன், பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர்கள் கோபாலகிருஷ்ணன், தனபாக்கியம், உள்ளிட்டோர் கலந்து கொண்டு குழந்தைகளு க்கான சட்டங்கள் குறித்தும், சமூக வலைதளங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும், அதிலுள்ள நன்மை, தீமைகள் பற்றியும், செல்போனை பயன்படுத்து வதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் பற்றியும், குழந்தைகள் பாதுகாப்பு கோரி தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் குறித்தும், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது பற்றியும் குழந்தைகளுக்கு புரியும் வகையில் கதை வடிவில் விளக்கி கூறினார்கள். இதில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர்,சமூகசேவை மைய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பால மலை ஊராட்சியில் மேட்டூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மேட்டூர் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிமன்ற நீதிபதியுமான முத்துராமன் தலைமை வகித்தார்.

    மேட்டூர்:

    கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பால மலை ஊராட்சியில் மேட்டூர் வட்ட சட்டப்பணி கள் குழு சார்பாக இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு மேட்டூர் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிமன்ற நீதிபதியுமான முத்துராமன் தலைமை வகித்தார். மேட்டூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் பத்மபிரியா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நடுவர் மணிவர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகா மில் குழந்தை திருமணத்தை தடுப்பது மற்றும் அனைவரும் கல்வி கற்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் 16 பேருக்கு வீட்டு மனை பட்டா, 10 பேருக்கு முதியோர் உத வித்தொகை வழங்கப்பட்டது.

    இதில் வருவாய்த்துறை அதி காரிகள் மற்றும் கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கிராமத்திற்கு தற்போது வரை அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
    • மிகவும் பின்தங்கிய பகுதியாக இருக்கிறது வெள்ளகவி மலைக்கிராமம். இந்த கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் முதன்முறையாக நடத்தப்ப ட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் மிகவும் பழமையானதும் ஆங்கிலேயர்களால் அறியப்பட்டதாகவும் இருப்பது வெள்ளகவி என்ற மலைக்கிராமம். 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கிராமத்திற்கு தற்போது வரை அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    சாலை வசதி இல்லாத இந்த கிராமத்தில் வாழும் மக்கள் நடைபயணமாகவே 16 கி.மீ. தொலைவில் உள்ள கொடைக்கானலுக்கு வந்து சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். பலமுறை கோரிக்கை வைத்தும் தற்போது வரை மண்சாலை மட்டுமே 3 கி.மீ. தூரத்துக்கு அமைக்க ப்பட்டுள்ளது.

    சாலை வசதி இல்லாததால் மிகவும் பின்தங்கிய பகுதியாக இருக்கிறது வெள்ளகவி மலைக்கிராமம். இந்த கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் முதன்முறையாக நடத்தப்ப ட்டது.

    கொடைக்கானல் நீதிபதி கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் அந்த கிராம மக்கள் பங்கேற்று தங்களுடைய கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    மேலும் அவர்களுக்கான உரிமைகளை பெறு வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். தங்களுடைய அடிப்படைத் தேவைகளை சட்டபூர்வமாக எவ்வாறு கையாள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு சட்ட விழிப்புணர்வுகளை நீதிபதி மற்றும் வக்கீல்கள் பங்கேற்று கிராம மக்களுக்கு விளக்கிக் கூறினர்.

    மேலும் கொடைக்கா னலில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள இக்கிராமத்திற்கு 10 கி.மீ. மலை பாதையின் நடுவே நடந்தே சென்று விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

    முதன்முறையாக நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமிற்கு கிராம மக்கள் வரவேற்பு தெரிவித்தனர். இதே போன்று இன்னும் பின் தங்கி உள்ள கிராமங்களிலும் சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கை யாக உள்ளது.

    • சான்றிதழ் வழங்குதல் மற்றும் பட்டிமன்றம்நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது.
    • பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைஒழிப்பு குறித்து சட்டவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    திருப்பூர் : 

    பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி தலைமையில்கடந்த 15 நாட்களாக திருப்பூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில்நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் கோர்ட்டு பெண் பணியாளர்கள், பெண் வக்கீல்களுக்கானபல்வேறு போட்டிகள், சான்றிதழ் வழங்குதல் மற்றும் பட்டிமன்றம்நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது. 

    ஆசிரியர் சிவகாமி வரவேற்றார். குடும்பநல நீதிபதி சுகந்தி சிறப்புரையாற்றினார். முதன்மை மாவட்ட நீதிபதிஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கி பேசும்போது, சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக மூத்த வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள்,மனநல மருத்துவர்கள் கொண்ட குழுவுடன் பல்வேறு பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைஒழிப்பு குறித்து சட்டவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருப்பூர்மாவட்ட நீதிமன்ற பாலின உணர்திறன் குழு மூலம் பெண் நீதிமன்றபணியாளர்கள், பெண் வக்கீல்களுக்கு பாலின சம உரிமை, பாலியல் வன்முறைக்கு எதிரான தற்காப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை புகார்களாக பெற்று அதற்குரியநடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

    விழாவில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா, தலைமைகுற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மேகலா மைதிலி, குற்றவியல் நீதித்துறைநடுவர்கள் பாரதி பிரபா, முருகேசன், கார்த்திகேயன், பழனிக்குமார், பெண் வக்கீல்கள், பெண் கோர்ட்டு ஊழியர்கள் பங்கேற்றனர்.

    • மாவட்டமுதன்மை நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் சுகந்தி முன்னிலை வகித்தார்.
    • திருப்பூர் கூடுதல் போலீஸ் கமிஷனர் வனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் நஞ்சப்பா ஆண்கள் பள்ளி சார்பில் குழந்தைகள் தினம், போதை ஒழிப்பு விழிப்புணர்வு, தேசிய சட்ட விழிப்புணர்வு முகாம் நிறைவு விழா நடைபெற்றது. இதில் மாவட்டமுதன்மை நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் சுகந்தி முன்னிலை வகித்தார். திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் மாணவர்களுக்கு போதை ஒழிப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் திருப்பூர் கூடுதல் போலீஸ் கமிஷனர் வனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவி ஊராட்சி சீலநாயக்கன்பட்டியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.முகாமிற்கு உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான மணிகண்டன், மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன் ஆகியோர் தலைமை தாங்கினார். முகாமில் சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் விஜயகுமார், மீனாட்சி, துங்காவி ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி காளீஸ்வரன், வழக்கறிஞர்கள் மகேஸ்வரன், காளீஸ்வரன், மாரிமுத்து, நாராயணசாமி, சத்தியவாணி, மகாலட்சுமி மற்றும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×